Tuesday 10 November 2015

குற்றம்

குற்றத்தின் பார்வையில் நான் நிரபராதி

சட்டத்தின் பார்வையிலோ குற்றவாளி

நெஞ்சில் பாய்ந்த குண்டுகளோ என்னை ஏளனம் செய்ய

காலில் குற்றிய முள் நீ என்னை ஏனடி கொல்கிறாய்

உயிர் பறித்து, ஊனம் ஏற்படுத்திய என் கரங்களோ

இன்று....

உமிழ் வழியும் குழந்தையை ஏந்தி பார்கிறேன்

என் வாழ்கை தவறோ என்று ...

இல்லை..

ஏளனத்தால் ,உடைமைகள் பறித்து

உடலில் உயிர்ன்றி திரிந்த காலங்கலை  மாற்ற

கரிப் பலகையின் மேல் இருந்த பற்று

துப்பாகியின் பால் வெறுப்பாய் மாற

ஓடி ஒளிந்த வாழ்க்கை சற்றே திசைமாற

இருட்டில் காலில் பாய்ந்த ரோஜா முள்ளே

உன் அழகை கண்டு நான் வியக்கவா

முள்ளென்று சுட்டுக் கொல்லவா !!

ஏதோ அன்று வியந்த என் மனம்

இதோ இன்று பயந்து கூக்குரலிடுகிறது

குருதி பறுகும் தோட்டாக்கள் போல்

பகை நிலம் சூழ்ந்த மரபலகையில்

மறைந்து செதில் உண்ணும் கரையான் போல்

வாகை சூட வந்த மலரே

என்னால் நீ  பூக்கவிட்ட மொட்டு ஒன்று  உதித்த நேரம்

உன் இதழ் உலர்ந்து வாடினாயே

அன்று தடம் மாறியதால் திகைத்த நான்

இன்று தடுமாற்றத்தால் கரைகிரேனே

மீண்டும் மலர்வாயா !!

இந்த மொட்டாக  இல்லை மொட்டுகுக்காக !!



















No comments:

Post a Comment